tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் விவகாரம்: அதிமுக திமுக காரசார விவாதம்

சென்னை, ஜூலை 3- தமிழகத்தில் இயற்கை எரி வாயு எடுக்கும் திட்டத்திற்கு அனு மதி கொடுத்தது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, திமுக இடையே காரசார விவா தம் நடைபெற்றது. ஹைட்ரோகார்பன் திட்டம்  தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் விவாதங்களுக்கு கனிம வளத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்தார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

அமைச்சர் சண்முகம்: 2011 ஆம் ஆண்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, அப்போது அன்றையதினம் ஆட்சி பொறுப்பி லிருந்த திமுகதான்  ஆய்வு செய்வ தற்கு அந்த நிறுவனத்துக்கு அனு மதி கொடுத்தது. அன்றைக்கு முத லமைச்சராக இருந்த ஜெய லலிதா, டெல்டா பகுதி விவசாய  மக்களின் உணர்வுக்கு மதிப்ப ளித்து ஒரு உயர்மட்ட குழு அமைத்தார். அந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்று திமுக ஆட்சியில் ஆய்வு நடத்த வழங்கப்பட்ட அனுமதியையும் ரத்து செய்தார். அந்த கொள்கை யைதான் இப்போதும் நடை முறைப்படுத்தி வருகிறோம். டி.ஆர்.பி.ராஜா திமுக: திமுக  ஆட்சியில் ஆய்வு நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

அமைச்சர்: 2010 ஆம் ஆண்டு  ஆட்சியிலிருந்த மத்திய காங்கி ரஸ் அரசு தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது. 1-1-2011-ல் தமி ழக அரசு அந்த  திட்டத்தை தொடங்  கலாம் என்று ஒப்புதல் தந்தது.  நீங்கள் (திமுக ஆட்சியில்) ஆய்வுக்கே அனுமதித்திருக்கக் கூடாது. ‘‘தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன்’’ என்ற நிறுவனம் ஆய்வு நடத்த, அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த  இன்றைய எதிர்க் கட்சித் தலை வர், அதிகாரி ராஜீவ் ரஞ்சன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். மு.க.ஸ்டாலின்: 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் புரிந்து ணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்  பட்டது. திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கவில்லை.

அமைச்சர்: ஹைட்ரோ கார் பன் திட்டமே தமிழ்நாட்டிற்குள் வரக் கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். திமுக ஆட்சியில் ஆய்வு நடத்த ஏன் அனுமதி கொடுத்தீர்கள்?

துரைமுருகன்: பொதுவாக எந்த திட்டமாக இருந்தாலும் ஆய்வு என்பது வேறு, அனுமதி என்பது வேறு. ஆய்வையே முடிவு என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அமைச்சர்: கத்திரிக்காயை சாப்பிடுகிறோம் என்றால் அப்ப டியே சாப்பிட முடியாது. வெட்டி, சுத்தம் செய்து சமைத்த பிறகே சாப்பிட முடியும். அது போல ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்பதாக சொல்லும் நீங்கள், அது தொடர்பாக கிணறு தோண்ட ஏன் ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தீர்கள்? 

மு.க.ஸ்டாலின்: மத்திய அரசு உங்களது எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  கொண்டு வந்து விடும் என்பதால் போராட்டம் நடத்துகிறோம்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: கடல் பரப்பில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆய்வு நடத்தினால் கூட அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும். தமிழ்நாட்டுக்குள் நில பரப்பளவில் மாநில அரசின்  ஒப்புதலைப் பெற்றே எதையும் செய்ய முடியும். எனவே நீங்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை. ஹைட்ரோகார்பன் திட் டம் உள்பட மக்களை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு  அனுமதி கொடுக்காது. இவ்வாறு விவாதம் நடந்தது.